நெருடல்


அவரைப் பார்த்தும்
பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன்

பார்க்காமல் போகிறார்
என்பதைப் பார்க்காமல்
பார்த்திருக்கலாம்தான்

கேள்வியும் பதிலும்
உள் நெருடியது

பார்த்தும் பாராமையை
பார்த்தும் பாராமல் சென்ற
அவரின் பக்குவம் பார்த்தும்
பாராத நான்.  

மேனா. உலகநாதன்

Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

கொலைகாரன்

வாசனை