Skip to main content

Posts

Showing posts from January, 2020

கனவின் குழந்தைகள்

நனவிலி பொம்மைகளின் நர்த்தனத்தில் மெய்மறந்து குதூகலித்தன கனவின் குழந்தைகள் மெய் எது மெய்நிகர் எது வண்ணங்கள் பீறிடும் கணினி மென்திரைக்குள் இருந்து சீறி வந்தன வெண்ணிறக் குதிரைகள் ராஜனாக குதிரை மீதேறி என் ஊர்வலம் தொடங்க எத்தனித்த போது உரைத்தது என் கால்களை துண்டாக்கி திசைக் கொன்றாய் வீசியவர் யார் பெருக்கெடுக்கும் குருதி மண்டலம் எங்கும் மிதந்த நனவிலி் பொம்மைகள் கெக்கலித்தன பின் நான் மட்டும் ஏன் அழ வேண்டும் பீறிட்டு பெருக்கெடுத்த வண்ணங்களுக்குள் மூழ்கித் திளைத்தோம் குருதிப் பெருக்கின் நிறம் இப்போது வேறாக குழம்பி தெரிந்தது நிறங்களை ருசிக்கத் தொடங்கிய போது எனக்கும் சிரிப்பு வந்தது இப்போது நனவிலி பொம்மைகள் மூர்ச்சையாகி வண்ணப் பரப்பெங்கும் மிதந்து கொண்டிருந்தன கனவின் குழந்தைகள் கைகொட்டிச் சிரித்தன கண்ணீர் கசிய.

நிற்றல் - மேனா.உலகநாதன்

இத்தனை அழகிய தீவு எனக்குள் உருவானதெப்படி கொந்தளிக்கும் மனக்கடலின் ஆர்ப்பரிப்புக்குப் பணியாத பேரமைதி பேரழகு பெரும் பசுமை ஆழி சினந்து அலைகள் எப்போதும் கரை தாண்டலாம் தீவு திட்டாகலாம் பறவைகள், மரங்கள், பூக்கள், காய்கள், கனிகள் அனைத்தும் ஒரு நொடியில் புதையுண்டு போகலாம் ஆனாலும் அந்த ஒற்றைப் பசும்புல்லுக்கு அச்சமில்லை நுனியில் துளித் திவலையுடன் நிமிர்ந்து நிற்கிறது கடலைப் பிரதிபலித்தபடி

துயில்

துயில் .... புழுக்களே நீங்கள் நிம்மதியாக  துயில் கொள்ளுங்கள் என்ன  நடந்துவிடப் போகிறது மிருகங்களின்  காலடிகளில்  மிதிபட்டு  உயிர் போகும்  தருணத்தில்  சிறிது வலிக்கும் வேறு என்ன  நடந்துவிடப் போகிறது புழுக்களே  நீங்கள் நிம்மதியாக  துயில் கொள்ளுங்கள்