000 வலிமையின் நிழல் உணர்வெங்கும் படிந்து பரவி புழுங்கியது எறும்பென்பதால் நசுக்கிக் கடந்த பாதங்களிடம் கருணை கோரி வரிசை கட்டிய பிற எறும்புகளும் கொத்துக் கொத்தாகச் செத்தொழிந்தன வலிமையின் மதர்ப்பேறிய பாதங்களின் காலணிக்கு சற்றே கருணை சுரந்தது உயிரற்ற எறும்புகளை மேலும் சிதைக்காமல் உதிர்த்தபடி பாதங்களை பணிந்து பிசகின்றி தன் பயணத்தை மேற்கொண்டது ஈகையின்மைக்கான இயற்கையின் கட்டமைப்பு வெகு கச்சிதம் பிசிறே இல்லாத ஜெயராஜின் ஓவியத்தைப் போல.
வலியவை மட்டுமே வாழ்வதற்கானதன்று இவ்வுலகம்