கனன்றடங்கி



பாலை பத்திரமாக
பாதுகாத்தன பூனைகள்

நரிகள் வஞ்சம் தொலைத்து
மனம் திறந்து பேசின

பாம்பின் நாவுகளில்
அமுதம் சுரந்தது

ஓநாய்களோ
ரத்தம் பிடிக்காமல்
பழச்சாறு கோரின

அச்சம் கனன்றடங்கும்
புன்னகை தவழ

துயில்கிறது
தூத்துக்குடி

(27.05.2018 ல் எழுதியது)

Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

கொலைகாரன்

வாசனை