அது எண்பதுகளின் தொடக்கம். பதின் பருவத்திலேயே உனைச் சந்தித்து விட்டேன். நர்சம்மா மகன் என்ற அறிமுகத்துடன் தமயந்தி அக்காள் அறிமுகப்படுத்தி வைத்தது. பின்னர்தான் தெரிந்தது நர்சம்மா என்றும், பார்வதி அம்மா என்றும் அழைக்கப்பட்ட அந்தத் தாய், என் தாயாருக்கு மட்டுமின்றி அந்தப் பகுதியில் பலருக்கும் அறிமுகமான, ஆசுவாசமான நட்பாகவும், உறவாகவும் இருந்துள்ளார் என்பது. அவரது அன்புச் செல்வனான - அன்புக்கரசனாகிய நீ, ‘அன்பு’ என்ற அடையாளத்துடன் எனைச் சார்ந்த எல்லோர் நெஞ்சிலும் குறுகிய காலத்திற்குள்ளேயே நிறைந்து விட்டாய். ஆனால், உனக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமானதற்கு அது மட்டுமே காரணம் அன்று. இளம் வயதிலேயே உன் நிதானமும், தீர்க்கமும், ஆழமான வாசிப்பும்தான் நான் அதுவரை பார்த்த நண்பர்களிடமிருந்து உன்னை வேறுபடுத்திக் காட்டின. அந்த நட்பை மேலும் ஆழமாக்கி அழகாக்கியவர் நம் இருவருக்கும் மூத்த தோழமையாய் இன்றுவரை திகழும் அன்பு அண்ணன் அயூப்கான். என் பெற்றோருக்கு எனைவிடப் பிரியத்திற்குரிய பிள்ளையானாய். என் சகோதர, சகோதரிகள், அவர்களது குழந்தைகள் அனைவருக்கும் அண்ணனாக, தம்பியாக, சித்தப்பாவாக, மாமாவாக, அண்ணனாக, தம்பியாக … ...
வலியவை மட்டுமே வாழ்வதற்கானதன்று இவ்வுலகம்