இளவேனில்: சிவந்து கருத்த சிந்தனை நதி! (05.01.2021 அன்று இளவேனில் மறைவை ஒட்டி இந்து தமிழ் நாளேட்டில் நான் எழுதி வெளிவந்த கட்டுரை)
https://www.hindutamil.in/news/opinion/columns/619182-ilavenil.html “ஆனாலும் இந்த உலகம் இன்னும் அழகானதாகவே இருக்கிறது”, ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ என்ற தனது படைப்பை இப்படித்தான் தொடங்கியிருப்பார் இளவேனில். நிறையப் பேர் அதன் தாக்கத்தில் கவிதையெழுத வந்தார்கள் என்பது அப்படைப்பின் வெற்றி. நெடும் பாலையில் கொடும் பயணம் என்று சொல்லத் தக்க வாழ்வை நெடுகச் சுமக்க நேர்ந்த நிலையிலும், குதர்க்கமும் குழப்பமுமான இந்த மனிதர்களை ஒருபோதும் அவருக்கு வெறுக்கத் தெரியவில்லை. அதனால்தான் இந்த உலகம் அவருக்கு இறுதிவரை அழகானதாகவே காட்சியளித்திருக்கிறது. “மனிதனைவிடச் சிறந்த புத்தகம் எக்காலத்திலும் எழுதப்பட்டதில்லை” என்ற அவரது கனவுநாயகன் கார்க்கியின் சொல்லாடலை அடிக்கடி உச்சரித்துப் புளகாங்கிதம் அடைவதற்கும்கூட, மானுடத்தின் மீதான தீராக் காதலே காரணம். பொதுவெளியில் பெரும் அடையாளங்களாக உலவிவரும் பலருக்கும் இளவேனில் என்ற சிந்தனையாளர், ஒரு ரகசிய சினேகிதனாகவே இருந்துவந்திருக்கிறார். ஏனெனில், மானுடம் குறித்து அவரிடமிருந்து ஊற்றெடுத்துக்கொண்டே இருந்த தீராத பாடுபொருள் மீதான மோகமே காரணம். சிறுவனாக இருந்தபோதே கோவில்பட்டியி
Comments
Post a Comment